செவ்வாய், 19 டிசம்பர், 2023

ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் போக்சோவில் கைது

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி அருகே உள்ள செங்கோடம்பள்ளத்தைச் சேர்ந்த ஹரி. இவரது மகன் திலிப் (வயது 30). இவர், நூல் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், திலிப் ஈரோடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ வழக்குப் பதிந்து திலிப்பை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: