அந்த வகையில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள புஞ்சை காளமங்கலம் கிராமம், கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராசு என்பவர் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில், சனிக்கிழமை (இன்று) ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து, ராசுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மொடக்குறிச்சி வட்டாட்சியர் இளஞ்செழியன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உடனிருந்தார்கள்.
0 coment rios: