வெள்ளி, 5 ஜனவரி, 2024

பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

ஈரோடு மாவட்டம், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மூன்றாம் கட்டமாக, விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரி இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். 

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகள், 356 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் ப.சீ. நாகராசன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி, வார்டு கவுன்சிலர் திலகவதி, ரஜியாபேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: