வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரகுராமன், சிபிஐ தெற்கு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சாதிக், தி.க.அமைப்புச் செயலாளர் த.சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து புகழஞ்சலி செலுத்திப் பேசினர்.
இக்கூட்டத்தில், எம்பி கணேசமூர்த்தி பேசுகையில், அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்கள் திருமகன் ஈவெராவை பின்பற்றி வரலாம் எனும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்தன என குறிப்பிட்டுப் பேசினார். தொடர்ந்து, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில், ராமுவை (திருமகன் ஈவெராவின் மற்றொரு பெயர்) என்றென்றும் என்னால் மறக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறி, ஒற்றை வரியில் தனது புகழஞ்சலியை நிறைவு செய்தார்.
இந்தக் கூட்டத்தில்,முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், கவுன்சிலர் ரவி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் பாஷா மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
0 coment rios: