தைப்பூசத் திருவிழா, குடியரசு தினம் மற்றும் 4வது சனிக்கிழமை, தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என 4 நாள்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்து பணியாற்றும், படிக்கும் பகுதிக்கு செல்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை (இன்று) மதியம் 2 மணி முதல் ஈரோடு பேருந்து நிலையத்தில் ஏராளமானோா் குவிந்தனா். இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, கோவை, சேலம் பேருந்துகளில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால், பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினா். இதில், இடம் பிடிப்பதில் பயணிகளுக்குள் தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேல் வெளியூா் செல்லும் பயணிகள் ஏராளமானோர் பேருந்து நிலையத்தில் குவிந்தனா். இதனால் திருவிழா கூட்டம் போல் இருந்தது. வயதான பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் சிரமப்பட்டனா். மேலும் , சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் கூட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
0 coment rios: