ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த ஒருவரின் 12 வயது மகள் 6ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெகதீஸ்வரன் (வயது 60) என்பவர் அங்கு வந்தார்.
சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த அவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாலட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் மேனகா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.
0 coment rios: