சனி, 24 பிப்ரவரி, 2024

பட்டியலின தம்பதி மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள குள்ளரங்கன்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கோகிலா(வயது 38). இவர்களது 2வது மகன் ரமணிச்சந்திரன் (வயது 21). கடந்த 18ம் தேதி அந்த பகுதியில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்து தருவது குறித்து அறச்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு கவுன்சிலர் கவின்குமாருக்கு (வயது 28) தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிகிறது.

அப்போது அவரது செல்போனை அவரது மனைவி எடுத்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் கவின்குமார் மற்றும் இரண்டு பேருடன் ரமணிசந்திரனின் வீட்டிற்கு சென்று செல்போனில் எனது மனைவியிடம் ஏன் பேசினாய் எனக் கேட்டு, ரமணிச்சந்திரன் அவரது தாய் கோகிலா, தந்தை சண்முகம் ஆகிய மூன்று பேரை தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த கோகிலா, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து அவரது தாய் கோகிலா கொடுத்த புகாரின் மீது அறச்சலூர் போலீசார் அறச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலரும், பாஜக மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளருமான கவின்குமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், பாஜக மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளரும், அறச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலருமான கவின்குமார் (வயது 28), குமார் (வயது 33), பரமேஷ்வரன் (வயது 27), பிரபு (வயது 41) ஆகிய நான்கு பேரை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி கிளை சிறையில் அடைத்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: