வியாழன், 22 பிப்ரவரி, 2024

பெருந்துறை அருகே சரக்கு வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து 6 பேர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கரண்டிபாளையம் பகுதியில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென எதிர்பாராத விதமாக காரும் - சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரில் வந்த இரண்டு பெரியவர்கள் இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். 

இதைப்போல் சரக்கு வேனில் பயணம் செய்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு வாகனங்கள் மோதியதும் காரின் முன் பகுதியும் சரக்கு வேனின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து நடந்ததும் இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் குழுவினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: