வியாழன், 21 மார்ச், 2024

பண்ணாரி குண்டம் விழா: ஈரோடு மாவட்டத்துக்கு 26ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் பெருந்திருவிழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

கல்லூரி பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 30ம் தேதி சனிக்கிழமையன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

மேலும், உள்ளூர் விடுமுறை நாளான 26ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: