சனி, 2 மார்ச், 2024

ரூ.7.80 கோடியில் தார் சாலை அமைக்க வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பூமி பூஜை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரையில் இருந்து தேவர்மலை வரை, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் சாலையில் பயணிப்பதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வனத்துறை மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாமரைக்கரை முதல் தேவர்மலை வரை 7 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி சனிக்கிழமை (இன்று) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கலந்து கொண்டு தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வனப் பொறியியல் அலுவலர் தனசேகரன், பர்கூர் வனக்காவலர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: