புதன், 6 மார்ச், 2024

கடம்பூர் அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள காடகநல்லி பெரிய உள்ளேபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (வயது 64). கூலித்தொழிலாளி. இவர் நேற்று விறகு பொறுக்க பெரிய உள்ளேபாளையம் வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று வந்து நின்றது. இதனை மாரப்பன் கவனிக்க வில்லை. திடீரென யானை பிளிறியபடி மாரப்பனை தூக்கி வீசியுள்ளது. பின்னர், அவரை மிதித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதில், மாரப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதனையடுத்து, அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மாரப்பன் இறந்து கிடந்தது குறித்து கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று உயிரிழந்து கிடந்த மாரப்பனின் உடலை பார்வையிட்டனர். அதன் பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: