திங்கள், 11 மார்ச், 2024

ஈரோட்டில் மாணவனின் உயிரைக் காப்பாற்ற நிதி திரட்ட கராத்தே பயிற்சி முகாம் நடத்திய ஆசிரியர் : நெகிழ்ச்சி சம்பவம்..!

உயிருக்காக போராடும் கராத்தே மாணவனை காப்பாற்றுவதற்காக நிதியைத் திரட்ட கராத்தே பயிற்சி முகாமினை நடத்திய கராத்தே ஆசிரியர்கள்: ஈரோட்டில் நெகழ்ச்சி சம்பவம்.
ஈரோடு ஒருங்கிணைந்த கராத்தே ஆசிரியர்கள் சார்பில் கரேத்தே பயிற்சி முகாம் என்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கராத்தே பயிற்சி முகாமில் ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.


இம்முகாமில் சர்வதேச கட்டா, கும்தே உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த கராத்தே பயிற்சி முகாம் குறித்து கராத்தே ஆசிரியர் சக்திவேல் கூறுகையில், ஈரோடு முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற ஏழை கராத்தே மாணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மாணவனின் அறுவை சிகிச்சைக்கான செலவிற்காக வழங்க உள்ளதாகவும், சக கராத்தே மாணவனான சந்தோஷை காப்பாற்றுவதற்காக, இந்த ஒரு நாள் பயிற்சி முகாமினை நடத்தி, கராத்தே பயிற்சி முகாம் மூலம் கிடைக்கும் நிதியை வழங்க உள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இந்த கராத்தே பயிற்சி முகாமில் கே.கே கணேசன், மணி, சக்திவேல், செல்வகுமார், ரமேஷ், தேவேந்திரன், ஆனந்தசாமி, சுரேஷ், மனோஜ்குமார், முருகேசன், மனோகரன், நரேஷ்குமார் உள்ளிட்ட கராத்தே பயிற்றுனர்கள் மற்றும் கராத்தே ஆசிரியர்கள் ஒரு கராத்தே மாணவனை காப்பாற்றும் நல் உள்ளத்துடன் உணர்வு பூர்வமாக பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு கராத்தே தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: