ஞாயிறு, 10 மார்ச், 2024

பவானியிலிருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊராட்சிக்கோட்டை பிரிவு பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப்பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அந்த வாகனத்தில் 33 மூட்டைகளில் 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் அந்தியூர் காட்டுப்பாளையம் ஏரித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் வாசு என்ற வாசுவகுமார் (வயது 32) என்பதும், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலுக்கு விற்பனைக்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வாசுவகுமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 1,650 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: