திங்கள், 25 மார்ச், 2024

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வேட்புமனு தாக்கல்

தமிழகம் முழுவதும் ஏப்.19ல் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 27ம் தேதி கடைசி நாளாகும். 
இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு அதிமுக மாநகர செயளாலரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், தேமுதிக மாவட்ட செயலாளர் ஆனந்த், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவர் முகமது லுக்மான், முன்னாள் மண்டல தலைவர் முனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: