வியாழன், 14 மார்ச், 2024

ஈரோடு நாச்சியப்பா, அகில்மேடு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோடு மாநகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக புகார் இருந்தது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்,  மணிக்கூண்டு முதல் பஸ் நிலையம் வரை உள்ள ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, ஆர். கே .வி . ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, கொங்காலம்மன் போன்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து இன்று ஈரோடு மாநகராட்சி சார்பில் ஈரோடு பஸ் நிலையம் பின்புறம் உள்ள நாச்சியப்பா வீதி, அகில் மேடு வீதி, வாசகி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இந்த பணியை மாநகராட்சி உதவி ஆணையர் பாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஈரோடு பஸ் நிலையம் பின்புறம் உள்ள பூக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. கடையன் முன்பு உள்ள கான்கிரீட் திட்டுகள் இரும்பு கூறைகள் போன்றவை அகற்றப்பட்டு வருகின்றன. இதை போல் கழிவுநீர் செல்லும் மேல்பகுதியில் உள்ள கான்கிரீட் தளமும் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடையின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் அதுக்கப்புறம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் 108 மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: