செவ்வாய், 5 மார்ச், 2024

ஈரோட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாநகர பொறியாளர் அணி சார்பில்ஈரோடு செங்கோடம்பாளையம் மனவளர்ச்சி குன்றிய தொழில் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு முத்துசாமி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் மாநகர பொறியாளர் அணி தலைவர் நாராயணசாமி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், துணைத் தலைவர் பூபதி, அமைப்பாளர் ஜி.வி.சின்னசாமி, துணை அமைப்பாளர் எம்.தாரிக், நிர்வாகிகள் ரபிக் மற்றும் ராசிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: