ஞாயிறு, 10 மார்ச், 2024

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்து உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.48 அடி ஆகும். இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் மாசி மாதம் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) இன்று முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது, மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீர் மீது பூக்களைத் தூவி வரவேற்றனர். 

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவிப் பொறியாளர் கிருபாகரன், சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நாகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: