இதனைத்தொடர்ந்து வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது, மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீர் மீது பூக்களைத் தூவி வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவிப் பொறியாளர் கிருபாகரன், சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நாகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: