வியாழன், 7 மார்ச், 2024

*புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை*

சேலம்.

S.K. சுரேஷ்பாபு.


புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.....


இந்த சம்பவம் தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் சேலம் ஜங்ஷன் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு, கழிவு நீர் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

காட்டுமிராண்டித்தனமான இந்த செயலை அம்பேத்கர் மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் நாட்டில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்.

உடனடியாக இந்த இருவருக்கும் புதுச்சேரி மாநில நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை என்பது சிறுமிகளையும், பெண்களையும், பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கும் மற்றும் செய்ய நினைப்பவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இந்த தண்டனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். எனவே புதுச்சேரி அரசும், புதுச்சேரி நீதிமன்றமும் மற்றும் புதுச்சேரி காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அதன் மாநில தலைவர் சேலம் ஜங்ஷன் அண்ணாதுரை கேட்டு கொண்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: