வியாழன், 7 மார்ச், 2024

சென்னிமலை அருகே ஆம்னி வேனில் கடத்திய 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பாலைக்குழி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 17 மூட்டைகளில் 180 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து ஆம்னி வேனை ஒட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், 'பெருந்துறை அருகே உள்ள ஓடப்பாறை கல்வி நகர் பகுதியை சேர்ந்த பழனி சாமி (வயது 48) என்பதும். சென்னிமலை பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை ஊத்துக்குளியில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களிடம் அதிக விலைக்கு விற் பதற்காக கடத்தி சென்றார்' என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 17 மூட்டை ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: