செவ்வாய், 12 மார்ச், 2024

அரசு பொது சொத்துக்கள் மீது சேதப்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.... சேலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தர்ணா போராட்டம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அரசு பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் ஓமலூர் காவல் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியில் பல ஆண்டுகளாக பட்டியல் இன மக்கள் பயன்படுத்தி வந்த பேருந்து நிழல் கூட்டத்தை தனிநபர் ஒருவர் இடித்து தரைமட்டம் ஆகியுள்ளார்
நிலத்தை ஆக்கிரமிக்க அரசு பொது சொத்துக்களை சேதம் விளைவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த பயனும் இல்லாததால் சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தர்ணா போராட்டத்தை அறிவித்தார்
ஓமலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அருள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் காவல் துறையை கண்டித்து முழக்கம் இட்டவாறு ஊர்வலமாக சென்றனர்
ஓமலூர்  காவல் நிலையம் முன்பாக அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து தண்டபரோட்டத்தில் ஈடுபட்டனர்
மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் அருளிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது
உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது இல்லையென்றால் ஒரு வார காலத்திற்குப் பிறகு பல இடங்களில் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் எச்சரித்தார்
சேலத்தில் பல இடங்களில் அரசு பொது சொத்துக்களை வீணாகும் போக்கினை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்
இந்தப் போராட்டத்தில் மாணவர் மாவட்ட தலைவர் கதிர் ஆசரத்தினம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைவர் மாணிக்கம் பசுமைத்தாயக மாநில இணை செயலாளர் சத்ரிய சேகர் நிர்வாகிகள் கே சி ஆறுமுகம் அண்ணாமலை,  பாபு ,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: