சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
உலக நுகர்வோர் தின விழா
விநாயகா மிஷன் அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் CONSUMER VOICE FOUNDATION மற்றும் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் நடந்தது..
கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
CONSUMER VOICE FOUNDATION மற்றும் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் அமைப்புகளின் நிறுவனர் பூபதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நுகர்வோர் கடமைகள் உரிமைகள் பற்றி பேசினார். அமைப்பின் துணைத் தலைவர் செல்வம் சுற்றுப்புற சூழல் பற்றி விழிப்புணர் உரையாற்றினார்..
தொழிலதிபர் ஈசன் கார்த்திக் தற்போது உள்ள சூழலில் ஏ ஐ தொழில் நுட்பம் பற்றி சாதபாதகங்கள் குறித்து பேசி மாணவ மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்தார்..
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நடத்தி உலக நுகர்வோர் தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது..
அமைப்பு நிர்வாகிகள் பாஸ்கரன் வெங்கடேசன் சரவணன் செந்தில் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்..
நுகர்வோர் விழிப்புணர்வு குறித்தும் நுகர்வோர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது குறித்து அவசியத்தை நிகழ்ச்சியில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்...
அமைப்பு நிர்வாகிகள் ஆடிட்டர் சரவணன் ஆடிட்டர் செந்தில் மக்கள் தொடர்பாளர் பூபதி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்...
0 coment rios: