இந்த பயிற்சியில், குழந்தை திருமணம் மற்றும் இள வயது கர்ப்பத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தினால் தாய்-சேய்க்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகளை ஊக்குவித்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணத் தடைச் சட்டம், போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், பெண் குழந்தைகளுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மருத்துவ அலுவலர் தனலட்சுமி, மாவட்ட உதவி திட்ட மேலாளர் வசந்த், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் கீதா, காவல் ஆய்வாளர் அனுராதா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: