ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

*திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் இந்திய கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு வேட்டை*

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதிக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தீவிர வாக்கு வேட்டை.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், திமுக தலைமையிலான இந்திய கூட்டணியினர் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்திய கூட்டணியில் பிரதான கட்சியாக விளங்கும் திமுகவினர் பகுதி செயலாளர் திமுக மாமன்ற உறுப்பினர்கள் என திமுகவில் உள்ள பல்வேறு பிரிவு செயலாளர் தங்களது பகுதிக்கு உட்பட்ட இடங்களில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் 31 வது கோட்டை திமுக சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சுமார் 500க்கும் மேற்பட்ட இருவாகனங்களில் சென்று தீவிர வாக்கு வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
31வது கோட்டை திமுக செயலாளர் S. சையது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு வாக்கு வேட்டையின் போது இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் 31வது கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சென்றவாறு மேளதாளங்கள் முழங்க திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம். செல்வகணபதி எம்ஏ.,எல்எல்பி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை வழங்கி கேட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் கட்சியின் 31 வது கோட்டத் தலைவர் அச்சு மற்றும் மா.ஜ.க மாவட்ட செயலாளர் சதாம் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஆதரவாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: