திங்கள், 8 ஏப்ரல், 2024

சேலத்தில் மின் நுகர்வோர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.


*சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமர் அன்ட் சிவிக் ஆக்ஷ்ன் குருப் மற்றும் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் மின் நுகர்வோர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் சேலத்தில் நடந்தது*

சேலம் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சேலம் கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
நுகர்வோர் உரிமைகள் இயக்கம் நிறுவனர் பூபதி வரவேற்றார்...
ரோட்டரி ஆளுநர் தேர்வு சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..
சேலம் வரி ஆலோசகர்கள் சங்க தலைவர் ராஜபாலு துவக்கி வைத்தார்.
கிழக்கு ரோட்டரி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன்..,
நுகர்வோர் உரிமைகள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், பொதுச்செயலாளர் வெங்கடேசன்..துனைபொதுச்செயலாளர்கள் வழக்கறிஞர் சிவநேசன், ஆடிட்டர் சரவணன் மற்றும் ஆடிட்டர் செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்..
நிகழ்ச்சியில் மின் நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது.


ஓய்வுபெற்ற மின் வாரிய அலுவலர் துரைசாமி... ஜெயராமன் ஆகியோர் மின் நுகர்வோர்களுக்கான ஆலோசனைகள் வழங்கினர்..
திரு சிவக்குமார் சோலார் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார்.
தொழில் முனைவோர்கள் பழ ராமசாமி உதயகுமார் மற்றும் ஜெகன் ஆகியோர் தொழிலும் மின் இணைப்பு குறித்து பேசினர்...
ஏராளமான தொழில் முனைவோர்கள் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.


கிழக்கு ரோட்டரி செயலாளர் சீனிவாஸ் நன்றி கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: