திங்கள், 15 ஏப்ரல், 2024

ஈரோட்டில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

ஈரோட்டில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (16ம் தேதி) செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்ய உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 7ம் தேதி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு பிற.பெ.அக்ரஹாரம் மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், 2வது கட்டமாக நாளை (16ம் தேதி) செவ்வாய்க்கிழமை ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கொடுமுடி ஒத்தக்கடை பகுதியில் காலை 10.30 மணிக்கும், தொடர்ந்து தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தாராபுரம் காவல் நிலையம் அருகில் காலை 11.30 மணிக்கும் வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக, கோபிசெட்டிபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் அருகில் இன்று (15ம் தேதி) திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கும், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் இரவு 8.15 மணிக்கும் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: