வியாழன், 18 ஏப்ரல், 2024

*குடும்பத்தினருடன் களமிறங்கிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார்*

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 


குடும்பத்தினருடன் தேர்தல் திருவிழாவில் ஜனநாயக கடமையாற்றிய மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு தமிழக மற்றும் புதுவையில் இன்று தொடங்கியது.
காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகின் இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று காலை முதலே வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அரசுபள்ளி வாக்கச்சாவடி மையத்தில், அ இ அ தி மு க  பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்திருந்தனர்.

குடும்பத்துடன் தேர்தல் திருவிழா வாக்குப்பதிவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர்களது குடும்பத்தினர் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.


இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஒப்பாரி பழனிசாமி அவர்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவில் தமிழக மற்றும் புதுவையில் உள்ள இளம் தலைமுறை வாக்காளர்கள் தவறாமல் வாக்கு சவடிகளுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றிட வேண்டும் எனறு கேட்டுக்கொண்டார்.





শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: