வியாழன், 9 மே, 2024

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி தொடர்பான இலவச பயிற்சி முகாம் வரும் 20-05-2024 முதல் 24-06-2024 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி முகாமில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தற்போது, இப்பயிற்சிக்கான முன்பதிவு நடக்கிறது.

இப்பயிற்சியில், கலந்து கொள்பவர்கள் 8778323213 , 7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், இப்பயிற்சியானது, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு , ஈரோடு - 638002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: