திங்கள், 13 மே, 2024

கோடை வெப்பத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை காக்கும் ஈரோடு தெற்கு திமுக இளைஞரணி..!

கோடை வெயிலின் வெப்பத்திலிருந்து பொதுமக்களும், பாதசாரிகள் விடுபடவும், மக்களின் சோர்வை போக்கவும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் தலைமையில், ஈரோடு மணிக்கூண்டு பிரதான சந்திப்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, தமிழக வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நீர்மோர் பந்தலில், முகமது அர்ஷத், ஜாகிர் உசேன், ரமேஷ், சீனிவாசன் மற்றும்
மாணவரணி மணி சிவா , சத்திரம் பிரபு, ஐடி விங் லதா சம்பத், சாதனா, கலைவாணி ஜாகீர், சதாம் உசேன், ஆசிக் முகமது, ஹரி பிரசாத், கவியரசு, முகமது ஆஷிக், தளிர் பணி, சூரம்பட்டி கோபி,, உள்ளிட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் ஈரோடு தெற்கு திமுக மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பங்கேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: