வெள்ளி, 17 மே, 2024

அந்தியூர் அருகே பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் மீட்பு

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, இடத்தில், சிலர் ஆக்கரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை கோர்ட் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய்த்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், அந்தியூர் அருகே எண்ணமங்கலம், குரும்பபாளையம் மேடு பகுதியில், 2 ஏக்கர் பரப்பளவினை இப்பகுதியினர் ஆக்கரமிப்பு செய்து, விவசாயம் செய்துள்ளது தெரியவந்தது. 

இதனையடுத்து பொதுப்பணித்துறையினர், அந்தியூர் வருவாய்த்துறையினர் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கரமிப்பு செய்துள்ள நீர்நிலை புறம்போக்கினை அதிகாரிகள் மீட்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: