கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு மினி சுற்றுலா வேனில் நேற்று புறப்பட்டனர். வேனை மைசூரை சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டினார். அதில், 11 பயணிகள் இருந்தனர்.
மாலை 5 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 9வது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: