சனி, 8 ஜூன், 2024

10ம் தேதி முதல் மக்கள் குறைதீர், இதர குறைதீர் முகாம்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டம் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதின்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

தற்பொழுது, இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 6ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் வரும் 10ம் தேதி (நாளை மறுநாள்) முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மற்றும் அனைத்து குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: