அப்போது, 12 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர் கோபி கரட்டுபாளையம கோரமடையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 39) என்பதும், இவர் பொதுமக்களிடமிருந்து ரேசன் அரிசியை வாங்கி நம்பியூர் மற்றும் குன்னத்தூர் பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது .
இதனையடுத்து, நவநீதகிருஷ்ணனை கைது செய்த போலீசார், 12 மூட்டைகளில் சுமார் 600 கிலோ ரேசன் அரிசியும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் வாகனத்தையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
0 coment rios: