செவ்வாய், 25 ஜூன், 2024

தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நன்றி

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்கும் வகையில் ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவி காஞ்சனா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்யா, மாநகர செயலாளர் குணா, மற்றும் ரஞ்சித், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: