திங்கள், 24 ஜூன், 2024

மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்: ஈரோட்டில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜவாஹிருல்லா ஈரோட்டில் பேட்டி.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லா ஈரோடு கே கே எஸ் கே திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டார்.   

அதன்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கள்ளச்சாராயம் குடித்து இருந்த இறந்தவர்களுக்குதமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய நிவாரணத் தொகையினைஅந்த மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் அவருடைய வைப்பு நிதி மற்றும் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்கள் என்பதையும், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வில் முறைகேடு உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

இதில் மாவட்ட தலைவர் சித்திக், தலைமை பிரதிநிதி எஸ் முகமது ரிஸ்வான், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது ,கரூர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, தமுமுக மாவட்ட செயலாளர் முஹம்மது லரிப், மாநில மருத்துவ அணி சேவை துணைச் செயலாளர் பௌஜீல் ஹசன்,மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் இலியாஸ், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சிக்கந்தரஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: