சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கே வேண்டும்.. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் வலியுறுத்தல்.
கள்ளக்குறிச்சி விஷக் கள்ளச்சாராய உயிர் பலிகளை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு கட்சிகளின் சார்பில் நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிர் பலிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பிரேமா ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் சங்ககிரி அப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொடர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராய விஷ சாராய பணிக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து பிரேமா ரஞ்சித் செய்தியாளரிடம் கூறுகையில், தமிழகத்தில் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் இனி மீண்டும் தொடரக்கூடாது என்று வலியுறுத்தியதோடு தவறும் பட்சத்தில் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
0 coment rios: