செவ்வாய், 25 ஜூன், 2024

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.. மாவட்ட திமுக நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யாதது ஏன்.. சேலத்தில் நடைபெற்ற தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஏ ஆர் இளங்கோவன் கேள்வி....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி மாறுதல்... கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளை பதவி விலக்காதது ஏன்.. சேலத்தில் நடைபெற்ற தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஏ ஆர் இளங்கோவன் வலியுறுத்தல். 
கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் உயிரிழந்த  விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும், 
சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைனாத்தில் சேலம் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகபுரம் பகுதியில் விசாராயம் அருந்தி 59 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விவகாரம் தமிழகத்தின் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்கித் தவறிய ஸ்டாலின் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது சேலம் ஒருங்கிணைந்த தேமுதிக சார்பில் கோட்டை மைதானம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் கழக உயர்மட்ட குழு உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஏ ஆர் இளங்கோவன் மற்றும் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக கழக அவைத் தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிய ஸ்டாலின் தலைமை ஆன திமுக அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கழக அவைத் தலைவர் இளங்கோவன் செய்தியாளரிடம் கூறும் போது தமிழகம் தற்போது போதை மாநிலமாக உருவாகியுள்ளது டாஸ்மார்க் கடை மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் அதிக அளவில் உள்ளன என்றும் அதைவிட ஒரு படி மேலாக தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு தான் என்றும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் மேலும் இந்த சம்பவத்திற்கு உரிய விசாரணை நடத்தை குற்றவாளிகளை தகுந்த தண்டனை அளிக்கும் வகையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், மாவட்டக் கண்காணிப்பாளர் பணி மாறுதல் செய்யப்பட்டது  உட்பட அது தொடர்பான அனைத்து அரசு துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கைகள் பாய்ந்த பொழுது, இந்த சம்பவத்திற்கு காரணமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர் மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், என ஏன் திமுக முக்கிய நிர்வாகிகளை திமுகவிலிருந்து திமுக தலைவர் நீக்கவில்லை என தேமுதிக மாநில நிர்வாகி ஏ ஆர் இளங்கோவன் ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு கடும் கேள்வி எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி கழக செயலாளர் ஆறுமுகம் நன்றி உரை 31 வது வட்டக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: