அதன் பின், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், ஈரோடு மாநகராட்சி ஒன்றாவது மண்டல தலைவர் பி.கே.பழனிசாமியின் ஏற்பாட்டில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் உள்ள அருள் நெறி திருப்பணி மன்ற மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆர்.ஹரிணி, முருகானந்த், ராகவன் மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த அமுல்ஹாசன், ஜி.கோபி, ஜெகதீஸ்வரன், யசோதரன் ஆகியோருக்கு அமைச்சர் முத்துசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதி, அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரது சிலைகளுக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து திமுக இளைஞர் அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஜெ.திருவாசகம் தலைமையில், ஈரோடு மணிக்கூண்டில் அலங்கரிக்கப்பட்ட வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார், அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்னர் நீர் மோர் பந்தல் நிறைவிழா நடைபெற்றது, கோடை காலத்தில் நீர்மோர் பந்தலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கி அமைச்சர் முத்துசாமி கௌரவித்தார்.
இதனைத் தொடர்ந்து என்.எல் கருணை இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே.இ பிரகாஷ் தலைமையில், அமைச்சர் முத்துசாமி இனிப்பு, பிஸ்கட், உணவு உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான பிரகாஷ், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் செந்தில்குமார், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் குமார் முருகேஷ், ஈரோடு மாநகர் திமுக செயலாளர் சுப்ரமணியன், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம், முன்னாள் எம்பி கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான பி.கே.பழனிசாமி, பெரியார் நகர் பகுதி திமுக செயலாளர் அக்னி சந்துரு, ஈரோடு கோட்டை பகுதி திமுக செயலாளர் ராமச்சந்திரன், ஈரோடு மாநகர் இணைச்செயலாளர் சந்திரசேகர், ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்ல பொன்னி மனோகரன், சசிகுமார் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அனைத்து சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
0 coment rios: