சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்ட அளவிலான டாக்டர் கலைஞர் கோப்பை T-20 கிரிக்கெட் போட்டி. 8 அணிகள் பங்கேற்பு...
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் Dr. கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா. சேலம் மத்திய மாவட்டம், சேலம் கிழக்கு மாவட்டம் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்தியதுடன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு T-20 போட்டியாக தொடங்கப்பட்டது. இந்த மாவட்ட அளவிலான போட்டியில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து எட்டு அணிகள் பங்கேற்றனர். நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு வின்ஸ்டார் அணியும் RNA அணியும் தகுதி பெற்றனர்.
சேலம் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளருமான எஸ் ஆர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டிக்கான விழாவில், விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் ஃபிரண்ட்ஸ் D. ரமேஷ் வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர், மாவட்ட அவைத் தலைவர் மு ரா. கருணாநிதி மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, திமுக நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ ஏ ஆறுமுகம், c அயலக அணி மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் செல்வமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக கோப்பை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க தொகையும், இரண்டாவது இடம் பிடிக்கும் மணிக்கு கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும், இதே போல மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்க பரிசும் வழங்கி விளையாட்டு அணிகளை பாராட்ட உள்ளனர்.
0 coment rios: