புதன், 31 ஜூலை, 2024

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மின்மோட்டார்களுடன் ஐந்து குடிநீர் தொட்டிகள், மயான சுற்றுச்சுவர் மற்றும் கான்கிரீட் சாலை... பாமக MLA இரா. அருள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.


சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மின்மோட்டார்களுடன் ஐந்து குடிநீர் தொட்டிகள், மயான சுற்றுச்சுவர் மற்றும் கான்கிரீட் சாலை... பாமக MLA இரா. அருள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். 

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நான்காவது கோட்டம் குற்ற தெரு பகுதியில் இல்லம் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்வின் போது தங்களது பகுதிக்கு குடிநீர் டேங்க் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கூட்டத்தெரு பகுதியில் மூன்று இடங்களில் குடிநீர் டேங்க் மற்றும் அதற்கான மின் மோட்டார் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதே போல மூன்றாவது கோட்டத்திற்கு உட்பட்ட வன்னியர் நகர் பகுதியில் இரண்டு இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு மின் மோட்டார் களுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அர்ப்பணித்தார். 
இதனை அடுத்து மூன்றாவது கோட்டம் ரெட்டியூர் பகுதியில் உள்ள மயானம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுசுழற் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மயானத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் இரும்பு கேட் அமைத்து பொது மக்களை சந்தித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஒப்படைத்தார். 
பின்னர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஐந்தாவது கோட்டம் பிடாரியம்மன் கோவில், வன்னியர் நகர், பெரிய புதூர் பள்ளி அருகில், மிட்டா புதூர் மற்றும் குட்ட தெரு ஆகிய ஐந்து இடங்களில் கொடியேற்று விழாவில் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கலந்து கொண்டு கட்சி குடியினை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதனை அடுத்து சாமி நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் இல்லம் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்வின் போது பொது காலனி பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை மிகவும் பழுதடைந்தும் குருகளாக உள்ளதாகவும் குடிநீர் குழாய் உடைந்து உள்ளதாகவும் புதிய கான்கிரீட் சாலை அமைத்து தரவேண்டும் என்று கேட்டிருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் சாமி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை அவர்கள் முன்னிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அர்ப்பணித்து வைத்தார். 
சட்டமன்ற உறுப்பினரின் இந்த நிகழ்வுகளின் போது முக்கிய நிர்வாகிகள் சத்திரிய சேகர், ராஜேந்திரன் சிட்டி வேல்முருகன் கலை சரவணன் இளவரசன் கோவிந்தராஜ் கிருஷ்ணம்மாள் நடராஜன் பாஸ்கர கணேஷ் ராஜகணபதி சுரேஷ் பாலாஜி பெருமாள் ராஜேஷ் அய்யனார் ஆறுமுகம் ரத்தினவேல் வைரம் ராஜா மற்றும் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: