சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மின் கட்டணத்தை உயர்த்தி வாக்காளரிடம் அளித்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது திமுக அரசு என மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பாலமுருகன் கண்டனம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் உயர்த்திய மின் கட்டணத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டிய ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு வகைகள் வழங்காத தமிழக அரசை கண்டித்தும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க காரணமாக இருக்கும் காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடக இசை கண்டித்தும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத மத்திய மாநில அரசை கண்டித்தும் சேலம் கோட்டை மைதான பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செவ்வாப்பேட்டை பகுதி கழக செயலாளர் தக்காளி ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார் மாணவர் மாவட்ட கழக அவை தலைவர் செல்வகுமார் மாவட்ட கழக துணைச் செயலாளர் சீனிவாசன் ராஜு சுகுமார் பேபி வெங்கடாசலம் செயற்குழு உறுப்பினர் முரளிதரன் செல்வராஜ் ஆரோக்கியசாமி பொதுக்குழு உறுப்பினர் நீலமேகம் நாராயணன் ஏழுமலை சந்தானம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர் தொடர்ந்து இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன் கண்டன உரையில் பேசியது தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது ஏற்கனவே பஸ் கட்டணம் பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய திமுக அரசு தற்போது மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை வஞ்சித்து வருகின்றனர் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்போம் என கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை மாறாக மக்களின் சுமையை ஏற்றுவதற்காகவே தற்போது மூன்றாவது முறையாக மின் கட்டத்தை உயர்த்தி உள்ளது. கண்டனத்துக்குரியது என்றும் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் அளிக்கும் திமுக அரசு இந்த மின்கட்டணம் உயர்வினால் மக்களுக்கு கொடுத்த தேர்தல் பணத்தை பெற்றுக் கொண்டது என்றும் தெரிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மின் கட்டண உயர்வு தெரியாது காரணம் தமிழகத்தை அதிகாரிகள் தான் ஆட்சி செய்து வருகின்றனர் எனவே பல்வேறு அரசியல் கட்சியினர் மின் கட்டண உயர்வை கண்டித்து கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் இதன் பிறகாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் மீண்டும் தேமுதிக சார்பில் மாநிலம் தழுவிய மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தப்படும் என தெரிவித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் சூரமங்கலம் காத்தவராயன் அஸ்தம்பட்டி ராஜா அம்மாபேட்டை செல்வகுமார் கிச்சிபாளையம் எம்பி விஜய் குகை பகுதி சேகர் கொண்டலாம்பட்டி செந்தில்குமார் மேற்கு ஒன்றியம் அப்பாவும் ஓமலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வநேசன் கன்னங்குறிச்சி பேரூர் கழக செயலாளர் கார்த்தி வேல் கேப்டன் என்ற செயலாளர் பன்னீர்செல்வம் இளைஞர் அணி திருஞானம் மகளிர் அணி பிரபாவதி உள்ளிட்ட பகுதி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: