வியாழன், 11 ஜூலை, 2024

சேலத்தில் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவ படத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு. காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகையை விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படத்தை ஏரித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.  இனியும் இது போன்ற விமர்சித்தால் அண்ணாமலையை கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை...

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் பட்டியலின தலைவர் செல்வபெருந்தகை அவர்களை ரவுடி என்று பொது தளத்தில் கூறி அவமானபடுத்திய  பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சேலம் கோட்டை மைதான பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.ஆர்.பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரை இழிவு படுத்தி பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் அவரது உருவ படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பாதுகாப்புக்கு கண்ணில் இருந்த காவல்துறையினர் அண்ணாமலையின் உருவ படத்தை கிளி பெறுவதைக் கண்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் இருந்த புகைப்படத்தை பிடிங்க முயற்சித்துதால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதுக்காக சேலம் கோட்டை மைதான பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. என்றாலும் காவல்துறையினரின் இந்த செயலை கண்டித்தும் அதனை மீறும் வகையிலும் மீண்டும் அண்ணாமலையின் உருவப்படத்தை கிழித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 
இது குறித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.ஆர். பி. பாஸ்கர் செய்தியாளர்களும் கூறுகையில், ஏற்கனவே நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தகுந்த விளக்கம் அளித்து இருந்த நிலையில் தேவையற்ற முறையில் பாஜக மாநில தலைவர் அதிமுக, திமுக அரசுகளையும் அதன் நிர்வாகிகளையும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவரை விமர்சித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இதே நிலையை தொடர்பு பட்சத்தில் தமிழக முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு சிறை பிடித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர்  கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: