திங்கள், 8 ஜூலை, 2024

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் பறிபோகும் அடுத்த தேர்தலோடு கட்சியும் காணாமல் போகும் என்று அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் பறிபோகும் அடுத்த தேர்தலோடு கட்சியும் காணாமல் போகும் என்று அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.


அதிமுக முன்னாள் சிவாஜி புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் விரைவில் அதிமுக ஒருங்கிணையும் ; அதற்காக ஒன்றியம் வாரியாக சென்று வருவதாகவும் தெரிவித்தார். அதிமுக பொது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்த புகழேந்தி அவரது தலைமையில் அதிமுக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் பறிபோவதோடு அடுத்த தேர்தலும் கட்சியின் காணாமல் போய்விடும் என்று தெரிவித்தார். பாமக பாஜக நாம் தமிழர் என அனைத்து கட்சிகளும் எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரின் புகழ் பாடி மக்களை சந்திப்பது இயக்கத்திற்கு கிடைத்த பெருமை என்றும் அவர் கூறினார். 
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
திராவிட இயக்கம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார்;
தனித்துவத்தோடு இயக்கத்தை நடத்தும் சீமான் தற்போது ஏன் ஷேக் ஆகிறார் ? சீமானிடம் ஏன் இந்த மாற்றம் ? என்றும் புகழேந்தி கேள்வி எழுப்பினார்.
பழனிசாமி என்று கூறினால் எதிர்த்துதான் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று சீமான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  
அண்ணாமலை பெரியாரின் படத்தை எடுத்துக் கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டில் பாஜக வளரும் என்றும் புகழேந்தி கூறினார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: