செவ்வாய், 30 ஜூலை, 2024

ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் வைபவம்.. சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ
கோட்டை பெரிய  மாரியம்மன் திருக்கோவிலில் கம்பம் நடும் விழா..... ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்...

சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். மேலும் சேலத்தில் எட்டு பேட்டைகளையும் கட்டியாளும் அம்மனாகவும், நவகிரக நாயகியாகவும் வீற்றிருக்கும்  கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திகழ்கிறது.  இந்நிலையில் கோட்டை மாரியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் நடுதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக  நடைபெற்றது.
விழாவையொட்டி உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 
அம்மனின் கணவரான சிவ பெருமானாக கருதப்படும் திருக்கம்பம் சேலம் மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் வளாகத்தில் அம்மனுக்கு நேர் எதிரே நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் வளாகத்தில் நடப்பட்ட திருக்கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். இந்த கம்பம் நடும்  விழாவில், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, மற்றும் அறங்காவலர்கள்  கலந்து கொண்டனர். மேலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கம்பம் நடும் உற்சவத்தை  தொடர்ந்து சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில், தாதகாப்பட்டி கேட் சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், சின்னக்கடை வீதி சின்னமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன் உள்பட 8 பேட்டை மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் நடுதல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
கோட்டை மாரியம்மன் கோவிலில் வருகிற 5-ம் தேதி சக்தி அழைப்பும், 7,8 மற்றும் 9-ம் தேதிகளில் பொங்கல் வைத்து பக்தர்கள் உருளு கண்டம் இடும் வழிபடு நிகழ்ச்சியும், 11-ம் தேதி சத்தாபரணி நிகழ்ச்சியும், 13-ம் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவையும், விழாவின் நிறைவாக வரும் 16-ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் விளையாடி உற்சவத்துடன் ஆடித்திருவிழா இனிதே நிறைவடைய உள்ளது நடைபெறுகிறது. மேலும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் பூஜைகள் தீபாரதணைகள் நடைபெற இருக்கிறது.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: