செவ்வாய், 30 ஜூலை, 2024

சேலம் வீரபாண்டி பத்தர பதிவுத்துறை அலுவலகத்தில் நில மோசடி செய்ததை ரத்து செய்ய கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் .... மோசடி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.


சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் வீரபாண்டி பத்தர பதிவுத்துறை அலுவலகத்தில் நில மோசடி செய்ததை ரத்து செய்ய கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் .... மோசடி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

சேலம் மாவட்டம் பைரோஜி ஊராட்சி நல்லராயன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னாகாள் என்பவருக்கு சொந்தமான 1.11 சென்ட் நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக போலி கிரயம் செய்து விவசாயி ஏமாற்றியுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து வீரபாண்டி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் நடைபெறும் நில மோசடி செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ் பழனி முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
விவசாயிகளின் போராட்டத்தை அறிந்த பத்திரப்பதிவுத்துறை பாதிக்கப்பட்ட விவசாயி சின்னாக்காள் அவர்களின் நிலத்தை மீண்டும் அவரது பெயருக்கே மாற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து அரசு நிர்வாகம் உரிய தலையீடு செய்து இருந்தாலும் இன்னும் பல விவசாயிகளை ஏமாற்றி போலியாக பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாகவும் விவசாயிகளை ஏமாற்றும் அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: