ஞாயிறு, 7 ஜூலை, 2024

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம். சேலத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு அஞ்சலி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 


பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதனை எடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகியவற்றின் சார்பில் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் மாவட்ட நூலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவருவ சிலை முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கூட்டு நடவடிக்கையின் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மாரியப்பன், பொன் சரவணன், வின்ணென்ட், மாரியப்பன், சஞ்சீவி மற்றும் கண்ணன் மூடிட்டு ஒரு கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவரோடு பல்வேறு முழக்கங்களையும் எழுப்பினர்.
 
இது கறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தங்களது அமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும், சமீபகாலமாக தலித் போராளிகளை குறிவைத்து தமிழகத்தில் அரங்கேறி வரும் படுகொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையில் பலமுறை புகார் தெரிவித்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் இனியும் தமிழகத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: