புதன், 3 ஜூலை, 2024

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் பெருமக்களுக்கு பாதிப்பு... பாதிக்கப்பட்ட ஆசிரிய பெருமக்கள் தர்ணா போராட்டம்.....

சேலம்..  
S.K. சுரேஷ்பாபு.

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பின் தர்ணா போராட்டம் 

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சேலம் நான்கு ரோடு அருகே சிறுமலர் துவக்கப்பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் ஜான் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 243 அரசாணை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் இதனைத் தொடர்ந்து தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் ஜான் கூறும்போது 60 ஆண்டு காலமாக இருந்த பனி மூக்கு பட்டியலை 243 அரசாணை பயன்படுத்தி மாநில அளவில் மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் இந்த 243 அரசாணையால் தமிழகத்தில் ஆசிரியர் ஆசிரியை அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது இந்த புதிய அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் இந்த புதிய அரசாணையால் இடமிட்டு இடம் மாறுதலில் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவே பணி முகப்பு அடிப்படையில் இடமாற்றம் செய்ய வேண்டுமென்றால் அந்த அந்த ஒன்றியங்களிலேயே மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறினார் இந்த ஆர்பாட்டத்தில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: