புதன், 3 ஜூலை, 2024

பொதுப் பாதையை அபகரித்து தென்னை மரங்கள் ஜல்லிகளை கொட்டி அட்டூழியம் செய்யும் ஆக்கிரமிப்பாளர்கள். பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் கோரிக்கை மனு..

சேலம்.
S.K. சுரேஷ் பாபு. 

பொது வழித்தடத்தில் தென்னை மரம் மற்றும் கல்லை கொட்டி வலியை மரித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .....
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றியம் தைலானூர் கிராமம் கல்ராயன் காட்டில் பொது பாதை போட்டு 25 வருடம் ஆகிறது. இரண்டு பேர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மினி டேங்க் 2 வீதி பைப் 30 வீதி லைட் உள்ளிட்டு இரண்டு முறை கான்கிரீட் ரோடு போட்டு மூன்றாவது முறையாக ஒப்பந்தமாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் சிவகுமார் தினேஷ் மூவரும் சேர்ந்து நடுரோட்டில் ஒரு லாரி கல்லைக் கொட்டி மேலும் 3 தென்னை மரங்களை நடுரோட்டில் நட்டு வைத்துள்ளனர். இவர்கள் மீது வீராணம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து ஆர்டிஓ ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மூவரும் தொடர்ந்து இன்னல் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் இடத்திலும் அளித்துள்ள மனுவிற்கு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சாகும்வரை சம்பந்தப்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்களின் சார்பாக ஏழுமலை என்பவர் தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: