இந்த முகாமிற்கு, ஈரோடு யுனிக் அரிமா சங்க தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். கேகேஎஸ்கே இண்டர் நேசன்ஸ் ரபீக் முன்னிலை வகித்தார். முகாமை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்: 1000க்கும் மேற்பட்டோர் பயன்
ஈரோடு யுனிக் அரிமா சங்கம், செல்வா சேரிடபிள் டிரஸ்ட் ஈரோடு, சுதா பலதுறை மற்றும் கேன்சர் சென்டர், ஆதித்யா பலதுறை மருத்துவமனை, ஆர்ஏஎன்எம் மருத்துவமனை, ஸ்ரீ தோல் மருத்துவமனை, அரசன் கண் மருத்துவமனை மற்றும் மெட்டி பல் மருத்துவமனைஇணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (25ம் தேதி) நடத்தியது.