சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் நகர்புற மைய தடகள போட்டிகள். 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஈட்டியர்கள் போட்டியில் மாவட்ட மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ள நான் விரைவில் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு இந்தியாவிற்கு நடைபெற உள்ளது ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற்று தருவேன். தமிழக காவல்துறை பெண் அதிகாரியின் சூளுரை.....
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சேலம் கல்வி மாவட்ட நகர் புற மைய தடகள போட்டிகள் சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நகர்ப்புற மைய தளங்களை போட்டியில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களுக்கு மூன்றாயிரம் மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் ஹிட்டல்ஸ் ஓட்டம், ஹிட்டல்ஸ் ஓட்டம், இது தவிர நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பங்கேற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக்காக முயற்சித்தனர். இந்த போட்டிகளைத் தவிர வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மீதமுள்ள தடகள போட்டிகள் அனைத்தும் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்று போட்டி அமைப்பாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொண்டது குறித்து சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி வீராங்கனை ரித்திகா கூறுகையில் மாவட்ட மாநில அளவில் பல்வேறு சாதனைகளை இந்த ஈட்டி எறிதல் போட்டியில் நான் பல்வேறு சாதனைகளை படைத்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளேன் என்றும் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றுள்ள இந்த குறுமையை போட்டியில் கலந்து கொண்டது நான் பெருமையாக கருதுகிறேன் என்றும், விரைவில் அதற்கான அனைத்து பயிற்சிகளையும் எடுத்து விரைவில் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் சேர்ப்பது மட்டுமே எனது குறிக்கோள் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் வீராங்கனை ரித்திகா.
இந்த போட்டியில் நகர்ப்புற மைய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்கள் உட்பட சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் உட்பட ஒவ்வொரு பள்ளியின் உடற்கல்வி இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.
0 coment rios: