சனி, 24 ஆகஸ்ட், 2024

சேலம் மேச்சேரியில் தவறான பொய்யான தகவலின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை துறையினர் தனது கடையை தடை செய்துள்ளனர் என பாதிக்கப்பட்ட சுப்ரமணி மனு..!

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேச்சேரியில் தவறான பொய்யான தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை 2011 விதி 234 - ன் கீழ் தனது கடையை தடை செய்து சட்டத்திற்கு புறம்பானது. மேல் முறையீடு விதி 2 1 12 கீழ் ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சுப்ரமணி மனு.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சீராமணியூர் மணியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அதே பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி சிறிய அளவில் பெட்டிக்கடை ஒன்றை பல ஆண்டுகளாக நடத்தி வரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். கிராம மக்கள் பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களை மட்டும் விட்டு வாழ்வாதாரம் செய்து வருகிறார். இவர் தனது கடையில் எந்த காலத்திலும் உணவு கட்டுப்பாடு பாதுகாப்பு துறை அறிவுறுத்திய தடை செய்யப்பட்ட எந்த உணவுப் பொருட்களையும் விற்பனை செய்தது இல்லை. உள்ளூர் சிலை பொறாமை குணம் கொண்ட சிலரால் தவறான தகவல் சுப்பிரமணி மீது அளித்துள்ளனர். கடந்த 27 5 24 அன்று பொய்யான தகவல் அடிப்படையில் சுப்ரமணியன் கடையில் தொடர் ஆய்வு செய்த போது எந்த விதமான தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களையும் கைப்பற்றவில்லை. மேலும் மேச்சேரி காவல் நிலையத்தில் பொய்யான முதல் தகவல் அறிக்கை எண் 289 பதிவு செய்தும் இந்திய  அரசியல் சாசன சட்டப்படி FIR நகல் அல்லது தகவல் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிக்கு அளிக்கப்படவில்லை. 
இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி அறிவுறுத்தலின் பேரில் அந்த பொய்யான தவறான சட்டத்திற்கு புறம்பான முதல் தகவல் அறிக்கையை உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் சேலம் மாவட்டம் அவர்கள் அளித்துள்ள தடை ஆணையின் 2169 / அ2 / 2024 உணவு பாதுகாப்பு அலுவலர் முற்றிலும் தவறானது. எனவே கடையின் ஆய்வின்போது ஒரு துரும்பு தடை செய்யப்பட்ட பொருளும் கண்டறியாத போது எடுக்காத போதும் எப்படி தவறாக முதல் அறிக்கை தகவல் மேச்சேரி காவல்துறை பதிவு செய்தது. ஏழை குடும்பம் ஒரு சிறிய பெட்டிக்கடையை வைத்து பிழைப்பு செய்யக் கூடாது என்ற சமூக தடை செய்யும் சிலரின் தவறான பொய்யான ஆதரமற்ற தகவலை வைத்து தடை செய்வது சமூக நீதிக்கு எதிரானது. ஆகவே சுப்பிரமணியம் அவரது கடையை நடத்திட தடை செய்யும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆணையை திரும்ப பெற வலியுறுத்தி இந்த மேல் முறையீடு மனுவை சுப்பிரமணி அழைத்துள்ளார். இந்த மேல் முறையீடு மனுவை ஆய்வு செய்தும் பொய்யான ஆதாரமற்ற தகவலை வைத்து தனது சிறு கடையை நடத்திட தடை செய்யும் ஆணையை ரத்து செய்து நீதி வழங்கிட சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களை வலியுறுத்தி இந்த மனுவை அளித்துள்ளார் சுப்பிரமணி. சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த புகார் மனுவின் நகல் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: